• Sat. Oct 11th, 2025

கொரோனா உயிரிழப்புகள் 10 மடங்காக அதிகரிக்கும்.

Byadmin

Jun 24, 2021

கொரோனா வைரஸால் தொற்றுக்குள்ளாவோர், உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்த வருடத்துக்குள்ளேயே 10 மடங்காக அதிகரிக்கலாமென நிபுணர்கள் “கருதுவதாகத் தெரிவித்த வைரங்கள் ாெடர்பான நிபுணரும் தொடர்பான பாராளுமன்றமான உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன, மந்த போசனை நாட்டில் அதிகரித்துள்ளதால் அபிவிருத்தித் திட்டங்களைத் தள்ளிவைத்துவிட்டு, நாட்டு மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றார். அரசாங்கத்தின் அந்தியாவசிய செலவிளங்கள், கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைதிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் நேற்றுக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பேராசிரியர் திஸ்ஸ விதாரள மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கொரோனா வைரஸ் தொற்று கொத்தணியாக இல்லாது சமூகப் பரவலாக இலங்கையில் மாற ஆரம்பித்துள்ளதாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, நான் சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தேன் என்றார். நாட்டில் மந்த போசனையும் நூற்றுக்கு 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே நாட்டில் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களைச் சற்று தள்ளிவைத்துவிட்டு மக்களுக்கு உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர். தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்குகளாக அதிகரிக்குமென நிபுணர்கள் கருதுவதாகவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். கொரோனா வைரஸ் நிலைமைகள் இன்னும் ஓரிரு வருடங்களுக்காவது நீடிக்கும். எனவே தொலைக்சாட்சியூடாக நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகளை முள்னெடுக்க வேண்டும். பாராளுமன்றில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி, அதனூடாகக் கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகளை முன்னெடுக்க வண்டும். இதன்படி வேண்டும். கிராமமட்டங்களிலும் – கொரோனா குழுக்களை உருவாக்கி அதனூடாக மக்களுக்கு சரியான சுகாதார அறிவுறுத்தல்களை வழங்க முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *