• Mon. Apr 6th, 2026

நடுக்கடலில் மற்றுமொரு கப்பல், தீ பற்றி எரிவதாக அறிவிப்பு

Byadmin

Jun 26, 2021

MSC MESSINA என்ற கொள்கலன் கப்பல் நடுக்கடலில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் மலாக்கா ஜலசந்திக்கு இடையில் இந்திய பெருங்கடலில் பயணிக்கும் போது குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கப்பல் கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் உள்ளதாக கூறப்படுகின்றது. லிபேரியா நாட்டு கொடியுடன் குறித்த கொள்கலன் கப்பல் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *