• Fri. Oct 17th, 2025

பன்னாட்டு உயர்மட்டப்பிரதிநிதிகள் நால்வர் இம்மாதம் நாட்டிற்கு வருகை

Byadmin

Jan 11, 2022

பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் உள்ளடங்கலாக வெளிநாடுகளின் உயர்மட்டப்பிரதிநிதிகள் நால்வர் இம்மாதம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஸிஜார்டோ, துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மேவ்லற் கவுசோக்லு, பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் தாரிக் அஹமட் மற்றும் கொரிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியொங்க் – சியோக் ஆகியோரே இம்மாதம் நாட்டிற்கு வருகைதரவுள்ளனர்.

ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஸிஜார்டோ இன்றைய தினம் நாட்டிற்கு வருகைதருவார் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 18 ஆம் திகதி நாட்டை வந்தடைவார்.

அதேபோன்று கொரிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியொங்க் – சியோக்கின் இலங்கைக்கான விஜயம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மேவ்லற் கவுசோக்லு இம்மாத இறுதியில் நாட்டிற்கு வருகைதருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேற்று முன்தினம் திங்கட்கிழமையுடன் முடிவிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *