கொழும்பில் பல பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை (08) காலை 08.00 மணி முதல் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை, தெஹிவளை – கல்கிசை மாநகர சபை, கோட்டை மாநகர சபை, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மற்றும் கொட்டிக்காவத்த – முல்லேரியா ஆகிய பகுதியிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.