• Sun. Oct 12th, 2025

எரிபொருள் விலைகளை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி !

Byadmin

Feb 26, 2022

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 15 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விலை அதிகரிப்பின்படி, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 203 ரூபாவாகவும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 139 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி.  நிறுவனம் அறிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி எரிபொருள் விலையை அதிகரித்திருந்த நிலையில்,  இந்த மாதத்தில் மாத்திரம் இரு தடவைகள் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *