கொழும்பில் சில பகுதிகளில் நாளை மறுதினம் 14 மணிநேர வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணி காரணமாகவே நீர் வெட்டு நாளை மறுதினம் சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் ஞாயிறு காலை 10.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, கொழும்பு 7,8,10,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளது.