• Wed. Oct 15th, 2025

ஜெனீவாவில் பல்வேறு இராஜதந்திரிகளுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு

Byadmin

Mar 6, 2022

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரின் பக்க அம்சமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கா , ஐக்கிய இராச்சியம் மற்றும் ஈரான் உள்ளிட்டவற்றின் நிரந்தர பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி பத்ஷேபா நெல் க்ரோக்கர் , ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தர பிரதிநிதி சைமன் மேன்லி , ஈரானின் நிரந்தர பிரதிநிதி எஸ்மாயில் பிகே ஹமானே மற்றும் ஈரான் நீதித்துறையின் பிரதி தலைவர் கலாநிதி கசென் கரிபாபாடி ஆகியோரை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்டோரும் இந்த சந்திப்புக்களில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *