• Sun. Oct 12th, 2025

கொழும்பை நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

Byadmin

Apr 9, 2022

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலுக்கு முன்பாக கட்சி சார்பற்ற மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக வெளியேறுமாறு கோரி மக்கள் இன்று காலை கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் ஒன்று கூடியிருந்தனர்.

இதில் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களும் நுகேகொடையில் இருந்து பேரணியாக சென்று காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *