• Sun. Oct 12th, 2025

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு ஆசிரியர் தளபாடங்கள் வழங்கி வைப்பு

Byadmin

Jul 10, 2017
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மட்-நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஆசிரியர் தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.07.05 ஆந்திகதி – புதன்கிழமை நடைபெற்றது.
நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்தின் அதிபர் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழங்கி வைத்தார்.
வறிய மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் இன, மத பேதமற்ற முறையில் தேவையுடைய, பின்தங்கிய பிரதேசங்களை மையப்படுத்தியதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தனது சொந்த நிதியினூடாகவும், தனது மாகாண சபை நிதி ஒதுக்கீடுகளினூடாகவும் தொடர்ச்சியாக இத்தகைய பல்வேறுபட்ட பாடசாலை அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எம்.ரீ. ஹைதர் அலி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *