• Sun. Oct 12th, 2025

‘நெல்லிக்காய் ஜூஸ்’ குடித்தால் என்றும் 18 வயதுதான்

Byadmin

Sep 6, 2025 ,

நெல்லிக்காய் ஜூஸ்’ குடித்தால் என்றும் இளமையாக மட்டும் அல்ல ஆரோக்கியமாக கூட இருக்கலாம்.

நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.

உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வாருங்கள்.

* நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும்.

* எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

* நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

* நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும்.

* நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *