• Sat. Oct 11th, 2025

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Byadmin

Apr 29, 2022

2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை திட்டமிட்ட படி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு, காகித பற்றாக்குறை பிரச்சினையாக அமையாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மே மாதம் 20 ஆம் மற்றும் 21ஆம் திகதி தொடர்புபடுத்தல் மத்திய நிலையங்களுக்கு வினாத்தாள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *