• Sat. Oct 11th, 2025

நகரங்களுக்கு மட்டும் எரிவாயு விநியோகம் வரையறை

Byadmin

Apr 29, 2022

நாட்டில் நகரங்களுக்கு மட்டும் எரிவாயு விநியோகத்தை வரையறை செய்ய லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு சமையல் எரிவாயு விநியோகத்தை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வரையறுக்க தீர்மானித்துள்ளது.

நாளாந்தம் 80000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் நடவடிக்கையானது 30,000 மாக குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *