எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த வேதன உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக தரப்புக்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் அவர் வரவுசெலவுத்திட்ட உரையின் போது தனியார் துறை பணியாளர்களுக்கும் வேதன உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், வேதன உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.