• Sat. Oct 11th, 2025

மேலும் ஒரு கப்பல் இந்த வார இறுதியில் இலங்கைக்கு

Byadmin

May 31, 2022

மேலும் 25,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இவற்றில் 60 சதவீதமானவை அதாவது சுமார் 30 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நேரத்தில் கப்பல் வராத காரணத்தினால் கடந்த செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் இடைநிறுத்தியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *