அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்குத் தேவையான நிதியை வழங்குவதற்கான குறைமதிப்பீட்டு மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் வரவு செலவுத் திட்ட ஆதரவு சேவைகள் மற்றும் அவசரகாலப் பொறுப்புத் திட்டங்களின் கீழ் இதற்காக 695 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.