• Mon. Oct 13th, 2025

4 கால்களுடன் பிறந்துள்ள கோழிக் குஞ்சு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

Byadmin

Aug 14, 2022

அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது.

மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். கோழி வளர்ப்பினையே அவர் ஜீவனோபாயமாக கொண்டு வருகின்றார்.

இவரது வீட்டில் ஆறு கோழிக் குஞ்சுகள் பொரித்த நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் காணப்படுகின்றது.

ஏனைய கோழிக் குஞ்சுகளைப் போல குறித்த கோழிக் குஞ்சும் சுறுசுறுப்பாக காணப்படுகின்றது.

குறித்த கோழிக்குஞ்சினை பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *