• Sun. Oct 12th, 2025

மெல்கம் ரஞ்சித்திற்கு கொரோனா

Byadmin

Aug 11, 2022

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் கொவிட் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்று காரணமாக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதை பேராயர் கர்தினால் ரஞ்சித் ஒத்திவைத்துள்ளார். இருப்பினும், ​​அவர் தற்போது குணமடைந்து வருவதால், இன்று,அல்லது நாளை உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்துவிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *