• Wed. Oct 15th, 2025

சவப்பெட்டிகளின் விலை இரட்டிப்பாக அதிகரிப்பு

Byadmin

Sep 8, 2022

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிணப் பெட்டியின் விலை தற்போது 60 ஆயிரம் ரூபாவரை அதிகரித்துள்ளது. அத்துடன், அமரர் ஊர்தி வாடகை, மலர் வளையங்களின் விலை உட்பட சகல சேவைகளினதும் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

அதேசமயம் இறந்தவர்களின் சடலத்தை அஞ்சலிக்காக வைத்திருக்கும் போது பிஸ்கட், தேநீர், குளிர்பானங்கள், போன்றவற்றிற்காக செலவிடும் தொகையும் எகிறியுள்ளமை மக்களை திண்டாடத்தில் தள்ளியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *