• Sat. Oct 11th, 2025

“நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் எவ்வித தேர்தல்களையும் நடத்த முடியாது” – மஹிந்த தேசப்பிரிய

Byadmin

Jul 23, 2017

பரீட்சை நடைபெறும் காலங்களில் தேர்தல் நடத்தப்பட முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் எவ்வித தேர்தல்களையும் நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவிருப்பதனால் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட முடியாது என அவர் அண்மையில் கட்சித் தலைவர்களிடம் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும் தேர்தல் முறையில் சில மாற்றங்கள் செய்யப்படவிருப்பதனாலும், நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட இருப்பதனாலும் அரசாங்கம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தல் ஒன்றுக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *