• Sun. Oct 12th, 2025

10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 12 வயது சிறுவர்கள்!

Byadmin

Mar 12, 2023


10 வயது சிறுமியை 12 வயது சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் சம்பால் மாவட்டம் ஜுன்வாய் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ள நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருந்த பாடசாலையில் அடைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *