• Sun. Oct 12th, 2025

முஸ்லிம் திணைக்­க­ளத்தின் முத­லா­வது பணிப்­பாளர் அன்சார் வபாத்

Byadmin

Aug 17, 2017

முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்தின் முதல் பணிப்­பா­ளரும் ஓய்வு பெற்ற இலங்கை நிர்­வாக சேவை உத்­தி­யோ­கத்­த­ரு­மான எம்.எம். அன்சார் (87) நேற்று முன்தினம் (15) கால­மானார். கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர் முஸ்லிம் சமய கலா­சார திணைக்­களம், ஐ.தே.க அரசினால் உரு­வாக்கப்பட்ட போது அதன் முதற் பணிப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

1977 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை அப் பத­வியை வகித்தார். அதற்கு முன் அவர் கண்டி, கச்­சேரி, கொழும்பு கச்­சேரி மற்றும் திறை­சேரி ஆகி­ய­வற்றில் உய­ர­தி­கா­ரி­யாக பணி­பு­ரிந்தார்.

இலங்கை தப்லீக் ஜமா­அத்தின் சூறாவின் அங்­கத்­த­வ­ரான இவர் வக்பு சபையின் தலை­வ­ரா­கவும் பணி­பு­ரிந்தார். அர­சாங்க சேவையின் மிக நேர்­மை­யாக பணி­பு­ரிந்த ஓர் அதி­காரி என பல தரப்­பி­ன­ராலும் பாராட்­டுக்­களைப் பெற்ற இவர் 7 பிள்­ளை­களின் தந்­தை­யாவார்.

இவ­ரது ஜனாஸா நேற்றிரவு வெள்­ள­வத்தை ராஜ­சிங்க வீதி­யி­லுள்ள 16 ஆம் இலக்­கத்­தி­லி­ருந்து தெஹி­வளை ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லுக்கு கொண்டு செல்­லப்­பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது ஜனாஸா தொழுகையில் பெருந்திரளான மக்கள் பங்கு பற்றினர்.

-நன்றி விடிவெள்ளி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *