சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா L1 விண்கலம் தற்போது தயாரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
மேலும், சில நாட்களில் விண்கலம் ரொக்கெட்டில் பொருத்தப்பட்டு அதன்பின் செப்டம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் ஹாலோ ஆர்பிட் எனப்படும் பூமியிலிருந்து சுமார் 15 இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த விண்கலம் 120 நாட்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.