தேர்தல் திணைக்களம், உலமா சபை வலியுறுத்து
வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்யும் விடயத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் போதுமான அக்கறை காட்டவில்லை என்ன தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாக்காளர் இடாப்பு பதிவில் முஸ்லிம் சமூகம் போதிய அக்கறை காட்ட வேண்டும் எனவும் இது தொடர்பில் கதீப்மார்கள் குத்பா பிரசங்கங்களில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேருநர் இடாப்பில் தனது பெயரை உட்சேர்ப்பதற்கு ஆட்களிடமிருந்து ஆர்வம் குறைந்துள்ளதன் காரணமாகவோ அல்லது குறித்த கணக்கெடுப்புப் படிவங்களை உரிய நாளில் கையளிக்க முடியாது போனதன் காரணமாகவோ அல்லது கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ தேருநர் இடாப்பில் பதிவு செய்வதற்குரிய தகவல்கள் உரிய காலப்பகுதியில் கிடைக்காததன் காரணமாக கொழும்பு மாநகர, கொழும்பு மாவட்ட மற்றும் வேறு பெரும்பாலான மாநகர, நகர பிரதேசங்களிலும் ஒரு சில கிராம மற்றும் தோட்டப் பிரதேசங்களிலும் 2017 இன் தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்படவிருக்கும் பெயர்களின் தொகை கணிசமானளவு குறைந்துள்ளன.
தேருநர் இடாப்பில் தனது பெயரை உட்சேர்ப்பதற்கு ஆட்களிடமிருந்து ஆர்வம் குறைந்துள்ளதன் காரணமாகவோ அல்லது குறித்த கணக்கெடுப்புப் படிவங்களை உரிய நாளில் கையளிக்க முடியாது போனதன் காரணமாகவோ அல்லது கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ தேருநர் இடாப்பில் பதிவு செய்வதற்குரிய தகவல்கள் உரிய காலப்பகுதியில் கிடைக்காததன் காரணமாக கொழும்பு மாநகர, கொழும்பு மாவட்ட மற்றும் வேறு பெரும்பாலான மாநகர, நகர பிரதேசங்களிலும் ஒரு சில கிராம மற்றும் தோட்டப் பிரதேசங்களிலும் 2017 இன் தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்படவிருக்கும் பெயர்களின் தொகை கணிசமானளவு குறைந்துள்ளன.
அந்த வகையில் தனது மற்றும் தனது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரதும் பெயர்கள் 2017 தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்பட்டுள்ளனவாவென்பதை பரீட்சித்துப் பார்த்து நிச்சயப்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்கு வாக்காளர்களாவதற்கான தகைமையுள்ள அனைத்துப் பிரசைகளிடமும் கேட்டுக் கொள்கின்றது.
2017 ஆம் ஆண்டிற்குரிய நகல், வரைவு இடாப்பு தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து மாவட்டச் செயலகங்களில், பிரதேச செயலகங்களில், உள்ளூராட்சி நிறுவன அலுவலகங்களில் மற்றும் அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்களிலும் 2017 ஆம் ஆண்டில் நீக்கப்படும் பெயர்களும் 2017 ஆம் ஆண்டில் உட்சேர்க்கப்படவிருக்கும் பெயர்களும் அடங்கிய நிரல்களும் 2016 இன் தேருநர் இடாப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தகைமையுள்ள எவரேனுமொரு பிரசையின் பெயர், 2017 தேருநர் இடாப்பில் பதிவு செய்வதற்காக இதுவரையில் கணக்கெடுக்கப்படவில்லையாயின் 2017 செப்டெம்பர் 6 வரை தேருநர் இடாப்பில் உட்சேர்ப்பதற்கான கோரிக்கைகளை அந்தந்த மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.
உலமா சபையின் அறிக்கை
இதேவேளை வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிய வேண்டியதன் அவசியம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வாக்குரிமை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜையினதும் உரிமையாகும். அதனை பெற்றுக்கொள்வதும், உரிய முறையில் பயன்படுத்துவதும் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இந்த விடயத்தில் நம்மில் சிலர் பொடுபோக்காகவும் கவனக்குறைவாகவும் நடந்து கொள்கின்றனர். அதன் காரணமாக உத்தியோகபூர்வமான சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சிரமப்படுவது மட்டுமல்லாமல், அதற்காக அரச உத்தியோகத்தர்களை குறை கூறுவதையும் சில சமயங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.
வாக்குரிமை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜையினதும் உரிமையாகும். அதனை பெற்றுக்கொள்வதும், உரிய முறையில் பயன்படுத்துவதும் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இந்த விடயத்தில் நம்மில் சிலர் பொடுபோக்காகவும் கவனக்குறைவாகவும் நடந்து கொள்கின்றனர். அதன் காரணமாக உத்தியோகபூர்வமான சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சிரமப்படுவது மட்டுமல்லாமல், அதற்காக அரச உத்தியோகத்தர்களை குறை கூறுவதையும் சில சமயங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.
பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்தல், காணி மற்றும் வீடு போன்றவற்றை பதிவுசெய்தல் போன்ற பல விடயங்களிலும் வாக்காளர் பதிவு அவசியப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் நாம் கூடுதல் கரிசனையோடு நடந்து கொள்ள வேண்டும்.
தற்போது வாக்காளர் பதிவு விபரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
தற்போது வாக்காளர் பதிவு விபரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
http://www.slelections.gov.lk/web/index.php/en இதில் தங்களது பெயர் இடம்பெறாதவர்களும் இதுவரை வாக்காளராக பதிவு செய்து கொள்ளாதவர்களும் அவசரமாக தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களை அணுகி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் கதீப்மார்கள் இன்றைய குத்பாவில் இதனை நினைவுபடுத்துமாறும் ஜம்இய்யா கேட்டுக்கொள்கின்றது.