• Sun. Oct 12th, 2025

13 வயது மகனுக்கு எதிராக தாயார் முறைப்பாடு – நீதவான் வழங்கிய உத்தரவு

Byadmin

Oct 15, 2023

காலி – பலப்பிட்டிய பிரதேசத்தில் 13 வயதுடைய மகனுக்கு எதிராக தாயார் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இணையம் ஊடாக கையடக்கத் தொலைபேசியில் வீடியோ கேம்களுக்கு அடிமையான தனது மகனை மீட்டு தருமாறு தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

தாயாரின் முறைப்பாட்டிற்கமைய, வெள்ளிக்கிழமை மாலை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் மகன் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

மாவட்ட நீதிமன்றத்தினால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை பிள்ளையின் பாதுகாப்பை தந்தையிடமே வழங்குமாறு பலப்பிட்டிய பதில் நீதவான் லூஷன் வடுதாந்திரி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *