• Thu. Oct 16th, 2025

உயர்தர பரீட்சை காரணமாக நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு!

Byadmin

Jan 24, 2024

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கந்த சந்தியிலிருந்து நுகேகொட வரை மற்றும் கிருலப்பனையிலிருந்து நுகேகொட வரையான ஹைலெவல் வீதியில் இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் நீதிமன்றத்தால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
குறித்த பிரதேசத்தில் 04 உயர்தர பரீட்சை நிலையங்கள் உள்ளதால், இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய நுகேகொட நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *