• Tue. Oct 14th, 2025

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு மீண்டும் மின்சாரம்!

Byadmin

Jan 26, 2024

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.

இன்று (26) பிற்பகல் நிலுவை கட்டணங்கள் செலுத்தப்பட்டதை அடுத்து புகையிரத நிலையத்தில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் கட்டணம் செலுத்தப்படாததால் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் கடந்த 24 ஆம் திகதி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததுடன், இதன் காரணமாக நிலைய அதிபர்கள், ஊழியர்கள், பயணிகள் என பலரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

எவ்வாறாயினும், மின் கட்டணம் காசோலை மூலம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தும் இலங்கை மின்சார சபை மின்சாரத்தை துண்டித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகிறது.

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இன்று (26) பிற்பகல் ‘அத தெரண’ செய்தி மூலம் தெரியவந்ததை அடுத்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *