என்னுடைய இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள என்னை செதுக்கிய, உருவாக்கிய, கணித ஆசிரியரைப் பார்க்கச் சென்றேன்.
ஆனால் என் மகிழ்ச்சியை நான் ஆசிரியரிடம் சொல்வதற்கு முன்பே, அவர்கள் இவ்வுலகிற்கு விடை சொல்லியிருந்தார்கள்
நான் மிகவும் சோகமடைந்தேன்..
நான் எப்போதும் எல்லா இடங்களிலும் அந்த ஆசிரியரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.
ஆம்!! அவர்கள் என்னை உருவாக்கிய ஆசான்.
பெற்றோர்களை மதித்து, தன்னம்பிக்கையுடன் நேர்மையாக பயணிப்பவர்கள் எப்போதும் வழிதவற மாட்டார்கள்.
2018 இல், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேச எனக்கு அழைப்பு வந்தது.
நான் முதலில் சொல்லத் தொடங்கியது எனக்கு கணிதம் கற்பித்த ஆசிரியரைப் பற்றி.
பிறகு என் அப்பாவைக் குறித்து பேசினேன்.
என்னை முன்னோக்கி வழிநடத்தியவர்கள் இவர்கள் இருவரும் தான்.
தந்தை இன்னும் பண்ணையில் வேலைப்பார்த்து கொண்டு இருக்கிறார்..
கீழ்வரும் வரிகளைத்தான் நான் ஹார்வர்டில் கடைசியாக பேசி முற்றுப்புள்ளி வைத்தேன்…
நீங்கள் கடினமாக உழைத்தால், ஒரு தொழிலாளியின் மகன் கூட ஒரு மில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்க முடியும்.
அவர் அங்கு நிற்கவில்லை ..
ஐக்கிய நாடுகள் சபையிலும் தனது இட்லி, வடை மற்றும் அதன் மூலம் வாழ்வில் உயர்வடைந்த வழிகள் பற்றியும் பேசினார்.
தமிழில்: சிராஜுத்தீன்அஹ்ஸனி