• Mon. Oct 13th, 2025

இலங்கையர்களை லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

Byadmin

Aug 2, 2024

அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.

லெபனானில் சுமார் 6,000 இலங்கையர்கள்  தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *