எதிர்வரும் நவம்பர் மாதம் முதல், பொரள்ளை மற்றும் மருதானை நகர்ப் பகுதியில் முன்னுரிமை ஒழுங்கை முறையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த நிர்மாணப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் 4 ஆவது கட்டம் பொரள்ளை சந்தியில் இருந்து கொழும்பு – கோட்டை வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.