• Sun. Oct 12th, 2025

ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்.!

Byadmin

Oct 19, 2017

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல்வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வேசாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுஉள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லைஎனவும் புதிய பயிலுனர் சாரதிகளை சேவையில் உள்ளீர்த்துக்கொண்டசெயற்பாட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி இந்த தொழிற்சங்கநடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

எனவே நாளை நள்­ளி­ரவு முதல்  ரயில்வே சார­திகள், பாது­கா­வ­லர்கள், நிலையப் பொறுப்­ப­தி­கா­ரிகள் மற்றும் கட்­டுப்­பாட்­டா­ளர்கள் பணி­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

கடந்த வாரம் தாம் முன்வைத்த கோரிக்­கை­க­ளுக்கு உரிய தீர்வுவழங்காததையடுத்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக இந்தசங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் குறித்த தொழிற்­சங்கம் மேற்கொண்டபோராட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்குமுகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *