பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல்வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வேசாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுஉள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லைஎனவும் புதிய பயிலுனர் சாரதிகளை சேவையில் உள்ளீர்த்துக்கொண்டசெயற்பாட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி இந்த தொழிற்சங்கநடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
எனவே நாளை நள்ளிரவு முதல் ரயில்வே சாரதிகள், பாதுகாவலர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த வாரம் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுவழங்காததையடுத்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக இந்தசங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் குறித்த தொழிற்சங்கம் மேற்கொண்டபோராட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்குமுகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.