• Mon. Oct 13th, 2025

“குடிநீரைச் சிக்கனமான பயன்படுத்துங்கள்”

Byadmin

Feb 19, 2025

நாட்டில் தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, குடிநீரைச் சிக்கனமான பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது.

இது தொமர்பில் மேலும் தொரிவித்துள்ளதாவது, வறண்ட காலநிலையினால் நீர் மூலங்களில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வரும் அதேவேளை, அதிக வெப்பம் காரணமாக நுகர்வோரிடையே நீரின் பாவனையும் அதிகரித்துள்ளது.

இதனால், நீர் விநியோகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, வாகனங்களைக் கழுவுதல் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை என்பவற்றுக்கு நீரைப்  பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *