• Sat. Oct 11th, 2025

பல இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் சிகரட்டுகளுடன் சிக்கிய வர்த்தகர்

Byadmin

Mar 1, 2025

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 10 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான பொலிஸாரால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனை நடவடிக்கை

ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து இன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இதன்போது, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 100 இலத்திரனியல் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *