• Sat. Oct 11th, 2025

பல கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது

Byadmin

Jun 22, 2025

ஹத்தரலியத்தபகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வந்த ஒருவர்  வழங்கிய ரூ.5,000 நாணயத்தாள்குறித்து சந்தேகம் அடைந்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, விசாரணையின் போது மூன்று போலிரூ.5,000 தாள்களுடன் அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரித்ததில், ஹத்தரலியத்த பொலிஸ் பிரிவின் உடுவா பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் ரூ.5,000போலி நோட்டுகள்- 08 ரூ.500 நோட்டுகள்-04  ரூ.100 நோட்டுகள்-06 மற்றும் 09 போலி ரூ.50 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, கள்ள நோட்டுகளை அச்சிட்ட தாக கூறப்படும் கலகெதர பகுதியில் உள்ளஒரு தகவல் தொடர்பு வசதியின்உரிமையாளர், பொலிஸார் அந்த இடத்தை சோதனைசெய்தபோது தப்பி ஓடிவிட்டார். 

கள்ள நோட்டுகளை அச்சிடப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 01 எப்சன் பிரிண்டர், சாம்சங்கணினி மற்றும் ஒரு CPU இயந்திரத்தை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *