• Sun. Oct 12th, 2025

நீரில் மூழ்கி இளைஞன் மரணம்

Byadmin

Aug 22, 2025

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக் கண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் (21) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இறக்ககக் கண்டி வாழை ஊத்து பகுதியை சேர்ந்த என்.அப்சான் வயது (22) எனவும் தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *