• Sun. Oct 12th, 2025

வெளிநாட்டு பயணிகள் இரவை கழிப்பதற்காக, புதிய முறையை அறிமுகப்படுத்திய உள்ளூர் மக்கள்

Byadmin

Aug 22, 2025

இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள், சீகிரியாவில் இரவை கழிப்பதற்கான ஒரு புதிய முறையை உள்ளூர் மக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சீகிரியாவை பார்வையிடுவதற்கு மாலை 5 மணி வரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதால், சீகிரியாவில் உள்ள வெளிநாட்டினர் யாரும் தங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும், உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குவதற்கும், இரவைக் கழிப்பதற்கும் தகுந்த ஏற்பாடுகளை செய்துக் கொடுத்துள்ளனர்.

இதனால் சீகிரியாவில் ஒரு அழகான இரவைக் கழிக்கவும், உள்ளூர் உணவை அனுபவித்து பாடல் பாடி மகிழ்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டில் சமைத்த உணவு, காய்கறிகள், பழங்களை வழங்குதல் மற்றும் இரவுக்கான உள்ளூர் உணவை வழங்குதல் ஆகியவை சீகிரியாவின் உள்ளூர் மக்களுக்கு பல பொருளாதார நன்மைகளைத் தரும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏராளமான வெளிநாட்டினர் சீகிரியாவிற்கு வருவார்கள் என அந்தப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *