ஜனாதிபதி – புதிய கடற்படை தளபதி சந்திப்பு
புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் எஸ் எஸ் ரணசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
கடற்படையின் புதிய தளபதி தனது கடமைகளை பொறுப்பெற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியைச் சந்தித்தார். இதன்போது நினைவுச்சின்னமும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.