• Sat. Apr 4th, 2026

அனுமதியின்றி புகைப்படம் எடுத்த இலங்கை யூடியூபர் கைது

Byadmin

Feb 10, 2026

பொது வெளியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இலங்கை யூடியூபர் ஒருவர், டொராண்டோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது, அனுமதியின்றி அந்நியர்களைப் படம் பிடித்தமை தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து, நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

45 வயதான அந்த நபர், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம் பிடித்ததாக அந்நாட்டு பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

டொராண்டோ பொலிஸ் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் கடந்த டிசம்பர் 10, 2025 அன்று பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், பெப்ரவரி 4, 2026 அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *