• Sat. Apr 4th, 2026

ஜனாதிபதி அநுர – அபுதாபி இளவரசர் கலந்துரையாடல்

Byadmin

Feb 20, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) மாலை நடைபெற்றது.

இந்தியாவின் புதுடில்லியில் தற்போது நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரு நாட்டுத் தலைவர்களும் அங்கு வருகை தந்துள்ள நிலையிலேயே, இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துத் தலைவர்கள் விரிவாக ஆராய்ந்தனர். குறிப்பாக, எரிசக்தித் துறை, முதலீடுகள் மற்றும் நவீன தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *