• Sat. Oct 11th, 2025

( படங்கள் & வீடியோ இணைப்பு) எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவோம். அனுராதபுரத்தில் மகிந்த முழக்கம்

Byadmin

Nov 13, 2017

( படங்கள் & வீடியோ இணைப்பு) எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவோம். அனுராதபுரத்தில் மகிந்த முழக்கம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் பொருட்டு சுதந்திர கட்சியின் அனைத்து படைகளும் தம்முடனேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் முதலாவது கூட்டம் அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே மகிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

தமக்கு ரணிலுடனோ, மைத்திரிபால சிறிசேன உடனோ தொடர்பு இல்லை எனவும், தாம் மக்களுடன் மாத்திரமே தொடர்பில் இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சிக்கு காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டதாகவும், சுதந்திர கட்சியின் கொள்கையை காப்பாற்றுவது கூட்டு எதிர்கட்சியே எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இந்த அரசாங்கத்தை தேற்கடிக்கும் முதலாவது வேலைத்திட்டம் தற்சயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *