• Sun. Oct 12th, 2025

சுகவீனமுற்றுள்ள ஒமான் நாட்டு மன்னருக்கு சுகம் வேண்டி இலங்கை விகாரையில் பூஜை

Byadmin

Nov 15, 2017

சுகவீனமுற்றுள்ள ஒமான் நாட்டு மன்னருக்கு சுகம் வேண்டி இலங்கை விகாரையில் பூஜை

சுகவீனமுற்றுள்ள ஒமான் நாட்டின் மன்னர் சுல்தான் காபூஸ் பின்ஸயீதுக்கு சுகம் வேண்டி இலங்கையி லுள்ள பெளத்த விகாரை ஒன்றில் பூஜை வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒமானில் வசித்த முன்னாள் இலங்கைப் பணியாளர்கள் நட்புறவுச் சங்கம் இதனை ஏற் பாடு செய்துள்ளது.

பொரலஸ்கமுவில் அமைந்துள்ள பெல்லன்வில ரஜமஹா விகாரையில் எதிர்வரும் சனிக்கிழமை குறித்த போதி பூஜை நடைபெ றவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடான ஒமான் நாட்டில் பணிபுரிகின்ற பெளத்தர்கள் தமது மதக்கிரியைகளை மேற் கொள்வதற்காக பூரணமான பெளத்த விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்காக அங் கீகாரம் வழங்கியதற்கு
நன்றி தெரிவிக்கும் வகையிலேயே தற்போது நோய் வாய்ப்பட்டுள்ள ஒமான் நாட்டின் மன்னர் சுல்தான் காபூஸ் பின் ஸயிதின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இப் பிரார்த்தனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விகாரை பூரீ சம்புத்தத்வ ஜயந்தி விகாரை எனும் பெயரில் ஒமானில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *