வெளிநாட்டு வேலைவாய்ப்பு கணனி தரவுகளில் மோசடி
பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் கணனி தரவுகளில் மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கனக்கஹெரத் இன்று பாராளுமன்றத்தில் வாய்மூலமான கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே ராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொழிநுட்ப ரீதியில் மோசடி குறித்து அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்று விசாரணை நடத்தி வருகின்றது. தற்போது குற்றச்சாட்டு இல்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.