சீரற்ற காலநிலை ! பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்த அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 05 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் 61,125 பேர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.