• Sat. Oct 11th, 2025

93 சபைகளுக்கான வேட்பு மனு இன்று முதல் ஏற்பு

Byadmin

Dec 11, 2017

93 சபைகளுக்கான வேட்பு மனு இன்று முதல் ஏற்பு


உள்ளுராட்சி சபைகள் 93 இற்கான வேட்பு மனுக்கள் ஏற்பு இன்று (11) முதல் ஆரம்பமாகின்றது.

இதன்படி, 07 மாநகர சபைகள், 18 நகர சபைகள் மற்றும் 68 பிரதேச சபைகள் என்பவற்றுக்கு இவ்வாறு வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. இந்த நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

வேட்பு மனுக்கள் குறித்த பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்றின் செயலாளர் அல்லது அதிகாரம் வழங்கப்பட்ட நபர் ஒருவரினால் கையளிக்கப்பட வேண்டும். அல்லாதவிடத்து அந்த வேட்பு மனு நிராகரிக்கப்படும்.

எதிர்வரும் 14 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *