• Mon. Oct 13th, 2025

மற்றுமொரு சாரார் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தினம் அறிவிப்பு

Byadmin

Dec 12, 2017

மற்றுமொரு சாரார் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தினம் அறிவிப்பு


ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புடன், கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கமும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தினம் குறித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக குறித்த சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து இன்று(12) அல்லது நாளை(13) ஆகிய இரு தினங்களுக்குள் சாதகமான பதில் ஒன்றினை வழங்குமாறும் அரசினை குறித்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வாறு சாதகமான பதில் ஏதும் கிடைக்காதவிடத்து நாளை மறுதினம் (14) பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கத்தின் பிரதான செயலாளர் தர்மகீர்த்தி யாப்பா தெரிவித்துள்ளார்.

தாம் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளும் பட்சத்தில் வைத்தியசாலை சேவைகள் அனைத்தும் முடங்கலாம் என மேலும் கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *