• Sun. Oct 12th, 2025

நிராகரிக்கப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள் சட்ட ஆலோசனையுடன் தாக்கல் செய்யப்படும்

Byadmin

Dec 15, 2017

நிராகரிக்கப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள் சட்ட ஆலோசனையுடன் தாக்கல் செய்யப்படும்

 

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டிருப்பதாகவும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சபைகளுக்கான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஶ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் 21ம் திகதி வரை ஏனைய வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் ஶ்ரீலங்கா பொதுசன பெரமுன அந்த அனைத்து சபைகளிலும் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *