(பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு பிறகு அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் தடை)
உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்த அனைத்து பிரச்சாரங்களும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.