• Sat. Apr 4th, 2026

நீரில் மூழ்கி உயி­ருக்குப் போராடிய நான்கு யுவ­தி­களின் உயிரை காப்பாற்றிய இளம் பிக்கு..!

Byadmin

Dec 26, 2017

(நீரில் மூழ்கி உயி­ருக்குப் போராடிய நான்கு யுவ­தி­களின் உயிரை காப்பாற்றிய இளம் பிக்கு..!)

ஒரு­வ­ருக்கு இரக்­கத்தைக் காட்­டு­வதைப் போன்றே உயிர்­காக்க வழி­செய்­தலும் உய­ரிய தர்­ம­மாக கொள்­ளப்­ப­டு­கி­றது. அதனை எடுத்­து­காட்­டாகும் வகையில் நீரில் மூழ்கி உயி­ருக்குப் போராடி கொண்­டி­ருந்த நான்கு யுவ­தி­களின் உயிரை இளம் பிக்கு ஒருவர் காப்­பாற்­றிய சம்­ப­வ­மொன்று காலி, கொக்­கல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

காலி பர­கொட ரஜ­மஹா விகா­ரையைச் சேர்ந்த கொக்­மா­துவ அநு­ரத்த என்ற பிக்கு ஒரு­வரே இவ்­வாறு கடந்த 23 ஆம் திகதி காலி, கொக்­கல கடலில் நீராடிக் கொண்­டி­ருந்த வேளையில் அலையில் அள்­ளுண்டு சென்ற 4 யுவ­தி­களின் உயிரை காப்­பாற்­றி­யுள்ளார்.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று கொக்­கல கடற்­க­ரையில் இந்த யுவ­திகள் நால்­வரும் தமது குடும்­பத்­தா­ருடன் பிறந்­தநாள் கொண்­டாட்­டங்­களில் ஈடு­பட்­டதன் பின்னர் கடலில் நீரா­டி­யுள்­ளனர். அச்­சந்­தர்ப்­பத்தில் திடீ­ரெ­ன­வந்த பாரிய அலையில் சிக்­குண்டு, அடித்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர்.

பிறந்­தநாள் கொண்­டாட்­டங்­களில் ஈடு­பட்­டி­ருந்த பெண் ஒருவர், தனது மகள்மார் அலையில் அடித்துச் செல்­லப்­ப­டு­வ­தாக கத­றினார்.

எனினும், பலத்த அலை­யோ­சை­யினால் அவ­ரது கதறல் எவ­ருக்கும் கேட்­க­வில்லை. அத­னி­டையே, காலி, பர­கொட விகா­ரா­தி­பதி அஜித தேரரின் உற­வி­னர்கள் சிலர் அம்­பா­றை­யி­லி­ருந்து வந்­தி­ருந்த நிலையில், அவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் விகா­ரா­தி­ப­தி­யுடன் கொக்­கல கடற்­க­ரைக்குச் சென்­றி­ருந்­தனர். அவ்­வே­ளையில் விகாரா திப­தியின் சீட­ரான கொக்­மா­துவ அநு­ருத்த பிக்­குவும் அவர்­க­ளுடன் சென்­றுள்ளார்.

அதன்­போது, தனது மகள்­களைக் காப்­பாற்­று­மாறு கூச்­ச­லிட்ட பெண்ணின் குரல் இப் பிக்­கு­வுக்கு கேட்ட மறு­க­ணமே, காவி உடை­யுடன் தனது உயி­ரையும் துச்­ச­மாக மதித்து கட­லுக்குள் குதித்து, கடலில் மூழ்­கிய மூன்று யுவ­தி­களை ஒரே தட­வையில் காப்­பாற்றி அவர்­களை கரை­சேர்த்­தி­ருந்த அதே­வேளை, நான்­கா­ம­வரைக் காப்­பாற்றும் போது பிக்­கு­வுக்கு உத­வி­யாக வெளி­நாட்­ட­வ­ரொ­ருவர் கைகொ­டுத்த நிலையில் அந்த யுவதியையும் பத்­தி­ர­மாக உயி­ருடன் கரை­சேர்த்­துள்­ளனர்.

இது தொடர்பில் அநு­ருத்த தேரர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில், இவ்­வா­றான இடங்­களில் நீரா­டு­ப­வர்­களின் பாது­காப்­புக்­காக ஏதேனும் வழி­வ­கைகள் செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். நான் காவி உடைக்கு உண்­டான கட்­டுப்­பா­டு­க­ளையும் மீறி நான்கு பெண்­களை காப்­பாற்­றி­யுள்ளேன். எனக்கும் அவ்­வ­ள­வாக நீந்தத் தெரி­யாது.

இருப்­பினும் ஆபத்து வரும்போது நான் அதனைச் செய்தேன். அல்லல்படுபவர்களுக்கு உதவவேண்டும் என பௌத்த தர்மம் கூறுகின்றது. அதனாலேயே நான் இதனை செய்தேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *