• Sat. Oct 11th, 2025

இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு 50 நாட்களில் மோசடி இடம்பெற்றது

Byadmin

Feb 1, 2018

(இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு 50 நாட்களில் மோசடி இடம்பெற்றது)

ஊழல் மோசடிகளை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மிகக் குறுகிய காலத்தில் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு 50 நாட்களில் மத்திய வங்கியின் மோசடி இடம்பெற்றது.
ஆனால், மத்திய வங்கியில் பணம் இருப்பதாக பிரதமர் கூறுகிறார்.
பணம் இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது என அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பிணை முறி ஆணைக்குழு அறிக்கையில் உள்ளது.
எனினும், அது தொடர்பில் தற்போதுவரை தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவில்லை எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *