(பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக்கட்சி இரகசிய பேச்சுவார்த்தையும் ஆரம்பம்)
இது தொடர்பான இரகசிய பேச்சுவார்த்தைகள் தற்பொழுது நடைபெற்றுவருத்தாகவும், முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நேற்று இரவுநடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பாரிய வீழிச்சி கண்டுள்ள ஜனாதிபதிதலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சகள்சிலர், அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜனாமா செய்து, பொதுஜனபெரமுனவுடன் இணையாகவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மஹிந்த ராஜபக்ஷவுடன்இணையுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடமிருந்து பாரியஅழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தையும், எதிர்க்கட்சித்தலைமைத்துவத்தையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு பொதுஜனபெரமுனவிலிருந்து ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனித்து ஆட்சி நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கியதேசிய கட்சி முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர்கள் உட்படக் குழுவினர் நேற்றுமாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில்கலந்துரையாடியுள்ளனர்.
இதற்கமைய ஜனாதிபதி நேற்றைய தினம் கூறியதுபோன்று இன்னும் ஓரிருதினங்களில் நாட்டில் பாரிய அரசியல் மாற்றமொன்று இடம்பெறுவதற்கானசாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிந்துதெரியவந்துள்ளது.