(நேற்று 7 பேர் பலியான அனர்த்தம்.. உரிமையாளர் போலீசில் சரண்)
கொழும்பு- கிரான்ட்பாஸ் பகுதியில் நேற்றைய தினம் இடிந்து வீழ்ந்த கட்டடத்தை புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
நேற்று மாலை குறித்தக் கட்டடம் இடிந்து வீழ்ந்தமையில் இதில் சிக்குண்டு 7 பேர் பலியானதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இதில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கால் ஒன்று சத்திரிசிகிச்சையின் போது அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.